Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது.. அப்புறம் பிரைவஸி இல்லன்னு புலம்புறது.. வனிதாவை சாடினாரா கஸ்தூரி?
சென்னை: எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது, அப்புறம் பிரைவஸி இல்லன்னு புலம்புறது என கஸ்தூரி போட்டுள்ள டிவீட் மறைமுகமாக வனிதாவை சாடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
Recommended Video
கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டார்.
உதட்டு முத்தங்கள், ஷாம்பைன் பொங்க நடந்த திருமண சந்தோஷம் அடங்குவதற்குள்ளே வனிதாவின் வாழ்க்கையில் புதிய சிக்கல் வெடித்துள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை.. ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு.. மாயன் காலண்டர்.. கஸ்தூரி பளிச் பேட்டி!
வெடி போட்ட முதல் மனைவி
ஏற்கனவே திருமணமான விஷுவல் எடிட்டர் பீட்டர் பால், முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல், இரண்டாவதாக நடிகை வனிதா விஜயகுமாரை திருமணம் செய்துள்ளார் என்ற புகாருடன் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமண வாழ்க்கையில் வெடி போட்டு இருக்கிறார் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் சண்டை
வனிதா விஜயகுமாரை டிவிட்டரில் விளாசித் தள்ளியிருந்த இயக்குநரும் நடிகையுமான ‘சொல்வதெல்லாம் உண்மை' புகழ் லக்ஷ்மி கிருஷ்ணனுக்கும் வனிதா விஜயகுமாருக்கும் நேற்று டிவிட்டரில் சண்டை களைகட்டியது. உங்க வேலையை நீங்க பாருங்க, மத்தவங்க லைஃப்ல தேவை இல்லாம தலையிட வேண்டாம் என விளாசி இருந்தார்.
எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது
உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவது. குடும்பம், குழந்தைங்கன்னு எல்லாரையும் யூடியூபில் அறிமுகப்படுத்துவது அப்புறம் என் லைஃப் என் இஷ்டம் எனக்கு பிரைவசி கொடுங்க என பிரச்சனை வந்த பிறகு புலம்ப வேண்டியது இதெல்லாம் எவ்வளவு வேடிக்கையா இருக்கு தெரியுமா?
சட்டவிரோதம்
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடமாட்டார்கள், அது சட்டவிரோதமாக இல்லாத வரைக்கும் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காத வரைக்கும் என நடிகை வனிதாவின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமல் கஸ்தூரி பதிவிட்டுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கமெண்ட்டில் பல நெட்டிசன்களும், வனிதாவை தானே சொல்றீங்க என கேட்டுள்ளனர்.
காட்டிக்குடுக்குறீங்களா
"என்ன கஸ்தூரி மேடம் பிக்பாஸ்ல வனிதா அக்கா கிட்ட வாங்கினது பத்தல போலயே.. இப்டி பழி வாங்குறேன்ற பேருல பண்றது தான் cheapest thing in the world.. didn't expected from you" என ஒரு நெட்டிசன் போட்ட கமெண்ட்டுக்கு, "நான் பொதுவா 'hypocrisy' பற்றி பேசியதும் உடனே இன்னாரைதான் சொன்னேன் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீங்க பாருங்க, இது அடுக்குமா? முட்டு குடுக்குறீங்களா காட்டிக்குடுக்குறீங்களா?" என யாரை பற்றி கஸ்தூரி பேசினார் என்பது தெளிவாக தெரியும்படி விவாதம் களைகட்டியது.