twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூடாகும் ட்விட்டர் வார்..பயந்துட்டியா குமாரு? சீண்டிய கஸ்தூரி..கிறுக்குத்தனம் பண்ணாத..எகிறிய வனிதா!

    By
    |

    சென்னை: நடிகை கஸ்தூரியை, வனிதா மீண்டும் கண்டபடி சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Recommended Video

    வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

    நடிகை வனிதா விஜயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன் வாக்குவாதம் கொரோனாவை விட கொடுமையாக நடந்து முடிந்திருக்கிறது, ட்விட்டரில்.

    இன்னும் தொடரும் போலிருக்கிறது இந்தக் காட்டமான பஞ்சாயத்து. அதிரடியாக பேசி, அமைதியான லட்சுமி ராமகிருஷ்ணனை ஆக்ரோஷமாக்குகிறார் வனிதா.

    வனிதாவும் லட்சுமியும் உரையாடியபோது.. அந்த ஆங்கர் தம்பி.. அந்த பட கேரக்டரதான் ஞாபகப்படுத்தினாரு! வனிதாவும் லட்சுமியும் உரையாடியபோது.. அந்த ஆங்கர் தம்பி.. அந்த பட கேரக்டரதான் ஞாபகப்படுத்தினாரு!

    வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து

    வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து

    முறையாக விவாகரத்து பெறாத பீட்டர்பாலை, மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகை வனிதா. எப்போதும் பரபரப்பாக இருக்கும்வனிதா, இதன் மூலம் பரபரப்பானார். வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட வாய்க்கா வரப்பு பஞ்சாயத்து.

    ஒரு புருஷன் இருந்தா?

    ஒரு புருஷன் இருந்தா?

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மீடியா ஒன்று நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தது. இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கமாகப் பேசினார். ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா? என் புருஷனை 'ஷிட்'டுன்னு சொல்ற.. உன் புருஷன்தான் ஷிட்.. உன் கூட குடும்பம் நடத்துறானே அந்த கேடுக்கெட்டவன்..' என்று ஆவேசமானார்.

    முட்டாள், காமெடி பீஸ்

    முட்டாள், காமெடி பீஸ்

    இந்நிலையில் ட்விட்டரில் இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'நூறு கணவர் வேண்டுமானாலும் இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வெறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது' என்று கூறியிருந்தார். இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேசியிருந்தார். இதனால் நடிகை வனிதா, கஸ்தூரியையும் விளாசினார். முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய வனிதா, அவரை பிளாக் செய்துவிட்டதாக அறிவித்தார்.

    உங்கள் கணவர் பற்றி

    உங்கள் கணவர் பற்றி

    இதற்கு, 'என்ன பயந்துட்டியா குமாரு' என்று கிண்டலடித்துள்ள நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது: மற்றவர்களை தூண்டிவிடுவது யார் என்பதை இப்போது உலகம் அறிந்திருக்கிறது. உங்களை கேள்விகேட்டால், அவர்களை அவதூறாகப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். சிங்கப் பெண்ணே, சிரிப்பாக வருகிறது. தயவு செய்து கவனியுங்கள், இந்த நிமிடம் வரை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, உங்கள் கணவர் பற்றியோ எந்த கேள்வியையும் கேட்கவில்லை.

    மோசடி கூட்டம்

    மோசடி கூட்டம்

    ஆனால், உங்கள் மலிவான நடவடிக்கைகளை மட்டுமே கேள்வி கேட்கிறேன். என்னை பிளாக் பண்ணியது நல்லதுதான். தைரியமாக உங்களை கேள்விகேட்கும் எல்லோரையும் பிளாக் பண்ணிவிடுங்கள். ஏமாற்றும் மோசடி கூட்டத்துக்கு நடுவில் இருந்து கொள்ளுங்கள். உங்களுக்காக வருந்துகிறேன். உங்களிடம் மனிதநேயம் மிச்சமிருந்தால் உங்கள் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் இப்போதும் உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள் ளார் கஸ்தூரி.

    வேலையை பாருங்க

    வேலையை பாருங்க

    இதற்குப் பதிலளித்துள்ள நடிகை வனிதா, முதல்ல உங்க மகிழ்ச்சியை கண்டுபிடிங்க. நீங்க நினைக்கிறதை விட, நான் என் வாழ்க்கையில சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாவும்தான் இருக்கேன். உங்க வேலையை பாருங்க. எனக்கு உதவறதாக நினைச்சு கிறுக்குத்தனமா எதுவும் பண்ண வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார். இது ட்விட்டரில் மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    English summary
    Kasthuri shankar has asked vanitha, 'bayanthutiya kumaru ?' and vanitha has given this reply to her
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X