Don't Miss!
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- News பாஜகவோட போயிட்டீங்களா.. இப்போ பாருங்க.. கூண்டோடு காலியான பாமக டீம்.. அன்புமணி ஷாக்!
- Technology கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
கிரண் பேடி பெண்ணில்லை: நாஞ்சில் சம்பத்துக்கு கஸ்தூரி பதில்
Recommended Video
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை கேலி செய்த நாஞ்சில் சம்பத்தை விளாசியுள்ளார் நடிகை கஸ்தூரி.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆணா, பெண்ணா என்றே தெரியவில்லை என்றார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
(குறிப்பு- இது அரசியல் பதிவு அல்ல, பெண்ணிய பதிவு. அதையும் தாண்டி, பண்பான மேடை பேச்சு குறித்த பதிவு.)
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தங்கச்சிங்களுக்கு பிரார்த்தனை செய்ங்க: சூப்பர் ஸ்டார் உருக்கம்
கிரண் பேடி ஆணா இல்லை பெண்ணா என்று தெரியவில்லை- நாஞ்சில் சம்பத்தின் நக்கல்.
தெரிஞ்சா மட்டும்? என்ன செய்வாராம் ? வாய் கெட்டவனுக்கு பால் எப்படி இருந்தா என்ன? ஆளுநர் பணிக்கும் பாலினத்திற்கும் என்ன சம்பந்தம் ? இப்படி பேசுறவங்க எந்த இனம்? மனுஷ இனமான்னே எனக்கு புரியலை. இதுக்கு மதிப்பிற்குரிய கனிமொழி என்ன சொல்லுவாங்க? இதுல்லாம் திமுக கட்சி கொள்கைப்படி ஏற்க கூடிய பேச்சுதானா? அது சரி. இப்படியே எல்லார் மேலயும் நடவடிக்கை எடுக்கணும்னா கழகத்துல அப்புறம் யாரு மிஞ்சுவாங்க.
நாஞ்சில் சம்பத் அவர்கள் நடித்த LKG படத்தில், வலிமை மிகுந்த ஒரு தலைவனை கேவலப்படுத்த 'ஆணே இல்லை' என்று எதிரணி பிரச்சாரம் செய்வார்கள். அதை போலவே, அந்த பட வசனத்தை மறக்காமல் இன்னமும் ஒப்பித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தில், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், தமிழறிஞர், திருக்குறளை ஒப்பிப்பவர், ஆனால், அரசியல் மேடைகளில் பெண்கள் முகம் சுளிக்கும்படி கொச்சையாக பேசும் பேச்சாளர். நிழல் நிஜமாகிவிட்டதா, இல்லை நிஜத்தைத்தான் படமாக எடுத்தார்களா?
ஒரு காலத்தில், வைகோ அவர்களின் வலது கையாக இருந்தவர். தெள்ளு தமிழுக்கு சொந்தக்காரர், திராவிட வரலாற்று அறிஞர். எப்படி இருந்த நான்(ஜில்) இப்படி ஆயிட்டாரு !
"பேடி' பேச்சு என்பது இதுதானோ?
சரி அவர் கேட்ட கேள்விக்கே வருவோம்- ஆணா பெண்ணா? ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்.
வாய்க்கு வந்தபடி வம்பு பேசுவது ஆண்மையுமில்லை, கிரண் பேடி ஆணுமில்லை. வாய்சவடாலுக்கு பயந்து வலிமையை தோற்பது பெண்மையென்றால், கிரண் பேடி மட்டுமல்ல, சோனியா, பிரியங்கா, கனிமொழி, நான் உட்பட யாருமே பெண்ணில்லை ! வீரமும் விவேகமும் வலிமையும் வலி தாங்கும் வைராக்கியமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவில் வைப்போம். கற்பையும் நாணயத்தையும் ஆண்களுக்கு கற்று கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.