Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
லேடீஸ் ஃபஸ்ட்...ஒலிம்பிக் வீராங்கனை மீராபாயை புகழ்ந்து கஸ்தூரி ட்வீட்
சென்னை : நடிகை, சமூக ஆர்வலர், தேச பற்றுமிக்கவர் என தன்னை பல வழிகளில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி, சமூக பிரச்சனை பலவற்றிற்கும் கருத்து தெரிவித்து வருபவர்.
சினிமா, அரசியல், உலகம் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து துறைகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் கருத்து கூறி வருகிறார். அப்படி சில விஷயங்களில் கஸ்தூரி பதிவிடும் கருத்துக்கள் பரபரப்பை கிளப்பி, சர்ச்சையிலும் முடிந்துள்ளன.
அந்த வரிசையில் இன்று இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி. டோக்கியாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மீரா.
இது பற்றி கஸ்தூரி ட்விட்டரில், இந்தியாவிற்கான முதல் பதக்கம். அது தான் லேடீஸ் ஃபஸ்ட். 115 கிலோவை சூப்பராக தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். 117 கிலோவை தூக்கி அற்புதமான முயற்சி என குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த ட்வீட்டை ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர். பதக்கம் வென்ற மீரா பாயின் ஃபோட்டோவை பதிவிட்டு, கஸ்தூரி பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பலர் ரீட்வீட்டும் செய்து வருகின்றனர்.