Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்ன கொடுமை சார்... சிவாஜியை விட உயர்ந்தவராம் ஜாக்கி ஷெராப்.. சொல்கிறார் ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் உயர்ந்தவர் என இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனைவிட இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் மிகவும் உயர்ந்தவர் என இயக்குனர் கஸ்தூரிராஜா விழா மேடையில் பாராட்டியுள்ளார்.
நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினியின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, தமிழில் என் ராசாவின் மனசிலே, துள்ளுவதோ இளமை உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தந்தவர். இவர் கடைசியாக 2006 ஆம் ஆண்டு 'இது காதல் வரும் பருவம்' என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து, படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார்.
சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் 'பாண்டி முனி' என்ற படத்தை அவர் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் 'ஜாக்கி ஷெரப்' நாயகனாக நடிக்கிறார். மெகாலி, நிகிஷா படேல் என இரண்டு நாயகிகள் அறிமுகமாகின்றனர். இவர்கள் தவிர பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், சிவசங்கர் நடனத்தையும் கவ னித்துக் கொள்கின்றனர்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு ன்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனைவிட ஜாக்கி ஷெரீப் உயர்ந்தவர் எனக் கூறினார். அவர் மேலும் பேசியதாவது," நான் பார்த்து வியந்த மனிதர் நடிகர் திலகம் அவர்கள். ஆனால் அவரை விட மிகவும் உயர்ந்தவர் ஜாக்கி ஷெரப். பிறரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை அவரை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தை சொல்கிறேன். அவரது வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது, சூப்பராக கவனித்தார். வடாபாவ், பிரட் ஆம்லட் என விதம் விதமாக உபசரித்தார். அதுமட்டுமல்ல வாசலுக்கு வந்து வழி அனுப்பியதுடன், என் ஷூவை எடுத்து காலில் மாட்டிவிட்டார். எவ்வளவு பரந்த குணம் அவருக்கு.
இப்படி எல்லாம் பேசி காக்கா பிடித்து வைத்துக்கொள்வது நல்லது என நினைக்கிறேன். இந்த படத்தில் அவர் முனீஸ்வரனாக நடிக்க இருக்கிறார். ஒரு அகோரி கதாபாத்திரத்தை செய்ய இருக்கிறார். "
இப்படியாக நீண்டது கஸ்தூரிராஜாவின் ஜாக்கி புராணம்.. கூட்டத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள், என்னதான் ஐஸ் வைப்பதற்காக பேசினாலும், ஜாக்கி ஷெரப்பை சிவாஜியுடன் ஒப்பிடலாமா என குழம்பியபடி (புலம்பியபடி) கிளம்பினர்.