Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏகப்பட்ட பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக தீபாவளி அன்றே ரிலீஸான 'கத்தி'
சென்னை: தயாரிப்பாளரான லைக்காவால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த கத்தி படம் ஒரு வழியாக அறிவித்தபடியே தீபாவளிக்கு ரிலீஸானது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளரான லைக்கா உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. லைக்கா இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரின் நிறுவனம், அதனால் அத்தகையவர் தயாரித்த படத்தை வெளியிட விட மாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன.
கத்தி தீபாவளி அன்று ரிலீஸாகும் என்று அறிவித்தபோதிலும் இந்த போராட்டங்களால் படம் ரிலீஸாகுமா ஆகாதா என்ற சந்தேகம் தீபாவளிக்கு முந்தைய நாள் அதுவும் மாலை வரை இருந்தது. இந்நிலையில் தான் படம் சம்பந்தப்பட்ட அனைத்தில் இருந்தும் லைக்காவின் பெயரை நீக்குவதாக அந்நிறுவனம் போராட்டக்காரர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. இதையடுத்து தான் படம் ரிலீஸாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.
தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டங்களால் படத்திற்கு இலவசமாக நல்ல விளம்பரம் கிடைத்தது என்றே கூற வேண்டும். இப்படி இத்தனை பிரச்சனைகளை தாண்டி கத்தி படம் அறிவித்தபடியே தீபாவளி அன்று ரிலீஸானது.
தமிழகம் தவிர கேரளா, கர்நாடகாவிலும் கத்திக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.