Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேரளாவில் கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
கேரளாவில் கத்தி படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதால், அவர் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
கத்தி படம் உலகம் முழுவதும் 1400 அரங்குகளில் வெளியானது. பக்கத்து மாநிலமான கேரளாவில் 100 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. படத்துக்காக பெரும் விளம்பரம் செய்தனர். ரயில், பஸ்களிலெல்லாம் கத்தி விளம்பரம் செய்தார்கள்.
இந்தப் படத்தின் கேரள உரிமை 4.5 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை இது பெரிய தொகை.
படம் வெளியான முதல் நாள் நல்ல வசூல் கிடைத்ததாம். கிட்டத்தட்ட ரூ 1 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும், அடுத்த நாளிலிருந்து வசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத்துக்குள் பெரும்பாலான அரங்குகளில் படத்தை எடுக்கும் நிலை வந்துள்ளதால், படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ 2 கோடி வரை நஷ்டப்படும் சூழல் எழுந்துள்ளதாக கேரள திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
கத்தி படம் முதல் நாளே ரூ 23.85 கோடியை வசூலித்துள்ளதாக அதன் இயக்குநரே கூறியுள்ள நிலையில், இப்போது கேரள விநியோகஸ்தர் நஷ்டம் என புலம்ப ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தமிழ்ப் படங்களை 2 கோடிக்குள்தான் விலைக்கு வாங்குவார்கள் கேரளாவில். ஆனால் ரூ 4.5 கோடிக்கு கத்தியை படத்தை வாங்கிய இந்த விநியோகஸ்தர், மேலும் ஒரு கோடியை விளம்பரத்துக்காக செலவு செய்திருந்தாராம்.
இதையெல்லாம் எப்படி எடுக்கப் போகிறேனோ என்று விநியோகஸ்தர் சங்கத்தில் முறையிட்டுள்ளாராம்.