Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கத்தி கதை திருட்டு விவகாரம்: முருகதாஸ், விஜய்க்கு மீண்டும் சம்மன்
‘கத்தி' படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி' படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்டஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த அன்பு. ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமதுஅலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.