Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்யின் அடுத்த படமே வரப் போகுது.. ஆனா கத்தி கதை வழக்கு முடியவில்லை!
விஜய்யின் அடுத்த படமான புலியும், கத்தி கதை வழக்கின் தீர்ப்பும் ஒன்றாகத்தான் ரிலீசாகும் போலிருக்கிறது.
கத்தி படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் (வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.