கத்தி ரிலீசில் உறுதியற்ற நிலை... பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள்!

By Shankar

கத்தி படம் வெளியாவதில் உறுதியற்ற நிலை இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கருதுவதால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சூழலைப் பயன்படுத்தி பூலோகம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கத்தி படத்தை வரும் 22-ம் தேதி வெளியாக விடமாட்டோம் என வேல் முருகன் தலைமையிலான தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து நேரடியாகவும் கூறிவிட்டனர்.

Kaththi in trouble... Advantage Poojai

இதனால் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாளை நடக்கும் கூட்டத்தில் தங்களின் நிலைப்பாட்டினைக் கூறுவதாக வேல் முருகனிடம் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர்.

நாளைய கூட்டத்திலும் கத்திக்கு எதிரான நிலை தொடர்ந்தால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது பூலோகம் படத்தை திடீரென வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, எந்த எதிர்ப்பையும் பற்றி கவலைப்படாமல், கத்தியை வெளியிடும் வேலையில் மும்முரம் காட்டும் லைகா நிறுவனம், தமிழகத்தைத் தவிர வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் மட்டுமே படத்தை வெளியிடும் சூழல் வந்தால், அதையும் சந்திக்க தயாராக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X