Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கத்துக்குட்டி வெற்றி... கொண்டாட்டத்தில் படக்குழு!
நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவான 'கத்துக்குட்டி' படம் கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுக்க வெளியானது. பெரிய அளவிலான விளம்பரங்களோ பரபரப்போ இல்லாமல் வெளியானாலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் நாளுக்கு நாள் தியேட்டர் வரவேற்பு மிகுதியாகி, தற்போது 242 திரையரங்குகளில் 'கத்துக்குட்டி' படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
நூறு சதவிகித காமெடி படமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழிக்கப்போகும் மீத்தேன் கொடூரத்தை மக்களுக்குச் சரியாகப் புரிய வைத்ததால் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவும் பலமாகக் கிடைத்திருக்கிறது. தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாய சங்க நிர்வாகிகளும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் 'கத்துக்குட்டி' படத்துக்கு பெரிய அளவிலான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தனர். தஞ்சையில் விவசாய சங்க நிர்வாகிகள் படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன் என்கிற விவசாயி, ''எங்களின் வாழ்க்கையையும் வலியையும் நெஞ்சைப் பிழிகிற அளவுக்கு கத்துக்குட்டி படம் பதிவு செய்திருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பி வழிந்தாலும், விவசாயிகளின் சோகங்களை நெஞ்சில் ஆணியடிக்கும் விதமாக இந்தப் படம் விளக்கி இருக்கிறது. எங்களின் மண்ணின் அழுத்தமான பதிவாக உருவாகி இருக்கும் கத்துக்குட்டி படத்தை தமிழக மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு கொடுத்து கொண்டாட வேண்டும். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் விதமாக நகர மக்களும் படித்தவர்களும் கத்துக்குட்டி படத்துக்கு மகத்தான ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி விவசாய ஜீவன்களுக்கான வெற்றி," என சிலிர்ப்பாகச் சொல்லி, படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.
படம் வெளியான நான்காவது நாளில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதை 'கத்துக்குட்டி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அப்படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குநரும் தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்களின் அபரிவிதமான ஆதரவால் மேலும் திரையரங்குகள் அதிகமாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நல்ல கருத்துக்களைச் சொன்னால் அத்தகைய படங்கள் வசூல் அள்ளாது என்கிற கடந்த காலக் கணக்குகளை உடைத்து, வசூலிலும் வரவேற்பிலும் சாதனை படைத்து வருகிறது 'கத்துக்குட்டி' படம்.
இந்த வெற்றியை நேற்று கேக் வெட்டிக் கொண்டாடியது இயக்குநர் சரவணன் உள்ளிட்ட படக்குழு.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!