Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கத்துக்குட்டி வெற்றி... கொண்டாட்டத்தில் படக்குழு!
நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவான 'கத்துக்குட்டி' படம் கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுக்க வெளியானது. பெரிய அளவிலான விளம்பரங்களோ பரபரப்போ இல்லாமல் வெளியானாலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் நாளுக்கு நாள் தியேட்டர் வரவேற்பு மிகுதியாகி, தற்போது 242 திரையரங்குகளில் 'கத்துக்குட்டி' படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
நூறு சதவிகித காமெடி படமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழிக்கப்போகும் மீத்தேன் கொடூரத்தை மக்களுக்குச் சரியாகப் புரிய வைத்ததால் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவும் பலமாகக் கிடைத்திருக்கிறது. தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாய சங்க நிர்வாகிகளும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் 'கத்துக்குட்டி' படத்துக்கு பெரிய அளவிலான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தனர். தஞ்சையில் விவசாய சங்க நிர்வாகிகள் படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன் என்கிற விவசாயி, ''எங்களின் வாழ்க்கையையும் வலியையும் நெஞ்சைப் பிழிகிற அளவுக்கு கத்துக்குட்டி படம் பதிவு செய்திருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பி வழிந்தாலும், விவசாயிகளின் சோகங்களை நெஞ்சில் ஆணியடிக்கும் விதமாக இந்தப் படம் விளக்கி இருக்கிறது. எங்களின் மண்ணின் அழுத்தமான பதிவாக உருவாகி இருக்கும் கத்துக்குட்டி படத்தை தமிழக மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு கொடுத்து கொண்டாட வேண்டும். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் விதமாக நகர மக்களும் படித்தவர்களும் கத்துக்குட்டி படத்துக்கு மகத்தான ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி விவசாய ஜீவன்களுக்கான வெற்றி," என சிலிர்ப்பாகச் சொல்லி, படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.
படம் வெளியான நான்காவது நாளில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதை 'கத்துக்குட்டி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அப்படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குநரும் தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்களின் அபரிவிதமான ஆதரவால் மேலும் திரையரங்குகள் அதிகமாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நல்ல கருத்துக்களைச் சொன்னால் அத்தகைய படங்கள் வசூல் அள்ளாது என்கிற கடந்த காலக் கணக்குகளை உடைத்து, வசூலிலும் வரவேற்பிலும் சாதனை படைத்து வருகிறது 'கத்துக்குட்டி' படம்.
இந்த வெற்றியை நேற்று கேக் வெட்டிக் கொண்டாடியது இயக்குநர் சரவணன் உள்ளிட்ட படக்குழு.