Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
நரேனின் கத்துக்குட்டி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை
சென்னை: விஜயின் புலி படத்துடன் இன்று வெளியாகவிருந்த கத்துக்குட்டி திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் இன்று வெளியாகவிருந்த கத்துக்குட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.
நரேன், சூரி இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்திருந்த கத்துக்குட்டி திரைப்படம் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நிலா சாட்சி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர்கபீர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், ‘ஓன் புரொடக்சன்' நிறுவனம் கத்துக்குட்டி என்ற படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக ‘ஓன் புரொடக்சன்' நிறுவனத்தின் உரிமையாளர் ராம்குமார், எங்கள் நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார்.
இந்த ஒப்பந்தத்தின்படி பணத்தை எனக்கு தராமல், படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கவேண்டிய பணத்தை ‘டெப்பாசிட்' செய்து விட்டால், படத்தை வெளியிடலாம். பணத்தை டெப்பாசிட் செய்யவில்லை என்றால், கத்துக்குட்டி படத்தை வெளியிடக்கூடாது. இந்த படத்தை வெளியிட 2 வாரத்துக்கு தடை விதிக்கின்றேன்' என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தற்போது கத்துக்குட்டி படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.