Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலை புதுப்பிக்கலாமா?: கெஞ்சிய கத்ரீனா, 'ஓவர்' என வெடுக்கென கூறிய நடிகர் ரன்பிர்
மும்பை: பார்ட்டி ஒன்றில் நடிகர் ரன்பிர் கபூரை பார்த்த நடிகை கத்ரீனா கைப் பழையதை எல்லாம் மறந்து காதலை புதுப்பிக்கலாம் என்று கெஞ்சி கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம்.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைபும் காதலித்து வந்தனர். மும்பையில் வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரன்பிர் தனது முன்னாள் காதலியான தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடிக்கையில் அவர்கள் நெருக்கமாக ஆனது கத்ரீனாவுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து ரன்பிர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
கத்ரீனா
ரன்பிரையும், கத்ரீனாவையும் சேர்த்து வைக்க அவரது தாய் முயற்சி செய்தார். கத்ரீனாவின் தாய் ரன்பிரின் அம்மாவை அணுகி பிள்ளைகளை ஒன்று சேர்த்து வைப்பது குறித்து பேசினார். ஆனால் ரன்பிரின் அம்மாவோ முடிந்தது முடிந்தது தான் என்று கறாராக தெரிவித்துவிட்டார்.
வாட்ஸ்ஆப்
காதல் முறிவுக்கு பிறகு ரன்பிரின் குடும்ப வாஸ்ட்ஆப் குருப்பில் இருந்து கத்ரீனாவை நீக்கிவிட்டனர். ஏற்கனவே ரன்பிரின் அம்மாவுக்கு கத்ரீனாவை பிடிக்கவில்லை என்று பேச்சாக கிடந்தது. அவருக்கு தீபிகாவையும் பிடிக்காது.
பார்ட்டி
பிரிந்த பிறகு ரன்பிரும், கத்ரீனாவும் முதல்முறையாக ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் சந்தித்தனர். அப்போது ஒருவரை பார்த்து மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் கத்ரீனா ரன்பிரிடம் சென்று காதலை புதுப்பிக்கலாமா என்று கெஞ்சி கேட்க அவரோ எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
புரியட்டும்
ரன்பிர் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியதும் கத்ரீனா மிகவும் கவலை அடைந்தார். ரன்பிருடன் மீண்டும் சேரலாம் என்று அவர் இனியும் நம்ப மாட்டார். கத்ரீனா சின்சியராக இருந்தும் ரன்பிர் அவரை ஏமாற்றிவிட்டார் என்று கத்ரீனாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.