Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திண்டுக்கல்லுக்கு வரும் கத்ரீனா.. தமிழகத்தில் என்ன செய்கிறார் கத்ரீனாவின் அம்மா?
Recommended Video
சென்னை : நடிகை கத்ரீனா கைஃப் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்கும் சினிமா பற்றிய செய்திகளை விட காதல் கிசுகிசுக்கள்தான் அதிகமாக வந்திருக்கிறது. சமீபத்தில்கூட ரன்பீர் கபூரை விட்டுவிட்டு மீண்டும் சல்மான் கானை அவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் சினிமாவுக்கு சிறிய பிரேக் விட்டுவிட்டு தமிழகம் வருகிறார். தமிழகம் வருவது சினிமா படப்பிடிப்புக்காக அல்ல. கத்ரீனா கைஃப்பின் அம்மா திண்டுக்கலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாராம்.
தனது அம்மாவைப் பார்ப்பதற்காக வரும் கத்ரீனா கைஃப், அந்தப் பள்ளிக் குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவழிக்க இருக்கிறாராம். அதற்காக, விரைவில் வர இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடிகை கத்ரீனா கைஃப்பின் அம்மா சுசாணே திண்டுக்கல் அருகே உள்ள மவுன்டெய்ன் வியூ பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அறக்கட்டளை சார்பாக, ஏழைக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் தனது அம்மாவை பார்க்கத்தான் வரவிருக்கிறார் கத்ரீனா.