Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை கெளசல்யாவுக்கு என்ன கொடுக்கப் போகிறார் நித்தியானந்தா?
நித்தியானந்தாவிடம் நடிகர்களை விட நடிகைகள்தான் நிறையப் பேர் பரம ஆதரவாளர்களாக உள்ளனர். ரஞ்சிதா, ராகசுதா, மாளவிகா என்று பலர் நித்தியானந்தா மீது அதிக பாசத்துடன் உள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்து கொண்டவர் கெளசல்யா.
தமிழில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். நேருக்கு நேர் படத்தில் விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்தார். கடைசியாக சந்தோஷம் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அக்காள் வேடத்தில் நடித்தார்.
கடந்த 3 வருடமாக இவர் நடிப்பதில்லை. சொந்த ஊரான பெங்களூரிலேயே செட்டிலாகி விட்டார். இவருக்கு இப்போது 32 வயதாகி விட்டது. தீராத முதுகு வலியால் ரொம்பக் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் நித்தியானந்தாவிடம் போனார். அவர் தனக்குத் தெரிந்த ஹீலிங் சிகிச்சை மூலம் கெளசல்யாவின் முதுகை நன்றாக நீவி விட்டு குணப்படுத்தினார். இதனால் பரிபூரண சந்தோஷமடைந்த கெளசல்யா, நித்தியானந்தாவின் தீவிர ஆதரவாளராக மாறி விட்டார். அடிக்கடி பெங்களூர் ஆசிரமம் பக்கம் கெளசல்யாவைக் காண முடிந்தது.
இப்போதும் அவர் ஆசிரமத்தில்தான் பெரும்பாலும் தங்கியிருக்கிறார். தியானம், யோகா என பிசியாக இருக்கிறார். அவரது சேவை, அர்ப்பணிப்பு உணர்வை மெச்சி அவருக்கு முதன்மை சீடர் என்ற அந்தஸ்தைக் கொடுக்க நித்தியானந்தா திட்டமிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.