போலீஸையே மண்டை காய வைத்த நடிகை காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது நடிகை காவ்யா மாதவன் போலீசாரை கடுப்பேற்றினாராம்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகை காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவர்களிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

காவ்யா
காவ்யா விசாரணையின்போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பிரபல மலையாள செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. எந்த கேள்விக்கும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம்.

அழுகை
போலீசார் கேள்வி கேட்டபோது ஒன்று அழுது சமாளித்தாராம் இல்லை என்றால் கேள்வி புரியவில்லை புரியவில்லை என்று சொல்லியே மழுப்பினாராம்.

கோபம்
விசாரணையின்போது காவ்யா மாதவன் நடந்து கொண்ட விதம் போலீசாரை கடுப்படைய வைத்ததாம். மேலும் காவ்யா மீதான சந்தேகம் வலுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திலீப்
நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவரான திலீப்பை காவ்யா ஒரு முறை கூட சிறைக்கு சென்று சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











