Just In
- 9 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 9 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 9 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 9 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 24.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.
பிரபல நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியோ தனக்கு உத்தரவு போட்ட மேடம் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவன் தான் என்று அண்மையில் தெரிவித்தார்.

நடிகையை கடத்தும் முன்பு சுனி காவ்யாவின் கொச்சி வீட்டிற்கு சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் காவ்யாவின் தாயிடம் இருந்து சுனி ரூ. 25 ஆயிரம் முன்பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
நடிகையை கடத்திய பிறகு சுனி காவ்யாவின் கடையான லக்ஷ்யாவுக்கு சென்றதற்கும் ஆதாரங்கள் உள்ளது. நடிகையை வீடியோ எடுத்த செல்போனை அவர் அந்த கடையில் உள்ள ஒருவரிடம் கொடுத்துவிட்டு ரூ. 2 லட்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது.
நடிகை வழக்கில் காவ்யா மற்றும் அவரது தாயிடம் போலீசார் ஏற்கனவே மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கைது பயத்தில் உள்ள காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.