Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.
பிரபல நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியோ தனக்கு உத்தரவு போட்ட மேடம் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவன் தான் என்று அண்மையில் தெரிவித்தார்.
நடிகையை கடத்தும் முன்பு சுனி காவ்யாவின் கொச்சி வீட்டிற்கு சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் காவ்யாவின் தாயிடம் இருந்து சுனி ரூ. 25 ஆயிரம் முன்பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
நடிகையை கடத்திய பிறகு சுனி காவ்யாவின் கடையான லக்ஷ்யாவுக்கு சென்றதற்கும் ஆதாரங்கள் உள்ளது. நடிகையை வீடியோ எடுத்த செல்போனை அவர் அந்த கடையில் உள்ள ஒருவரிடம் கொடுத்துவிட்டு ரூ. 2 லட்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது.
நடிகை வழக்கில் காவ்யா மற்றும் அவரது தாயிடம் போலீசார் ஏற்கனவே மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கைது பயத்தில் உள்ள காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.