Don't Miss!
- News வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை மோடி கையில் எடுத்துள்ளார்.. மனோ தங்கராஜ்
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள!
கொச்சி : கதாநாயகிக்கு முக்கியத்துவம் அதேசமயம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Recommended Video
தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.
தேசிய விருது பெற்ற இளம் கன்னட நடிகர் மரணம்.. நடிகை கஸ்தூரி இரங்கல்!
சாணி காயிதம், அண்ணாத்த, மரக்கார்,சர்க்காரு வாரி பாட்டா என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பூக்களுடன் பூக்களாக கலந்தவாறு வெளியிட்ட புகைப்படத்தை அனைவரும் மெய் மறந்து ரசித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் காட்சிகள்
பெரும் போராட்டத்திற்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது . இதில் கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது படக் குழுவில் இருந்த இருவக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு சமீபத்தில் உரிய பாதுகாப்புடன் நடந்து முடிவுற்றது.
தேசிய விருது
மகாநடி படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். பெண்குயின, மிஸ் இந்தியா என போன்ற படங்களைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு குட்லக் சகி மற்றும் வாஷி ஆகிய படங்கள் ஹீரோயின் சென்ரிக் வரிசையில் உள்ளன.
விரைவில் ட்ரைலர்
ராக்கி என்ற படத்தை இயக்கி உள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. மிகவும் வித்தியாசமாகவும் ராவான கதைக் களத்தை கொண்டும் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. விரைவில் ட்ரைலர் எதிர்பார்க்கப்படுகிறது.
பூக்களோடு பூக்களாக
ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்க்கார் என 2 திரைப்படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மூன்றாவது முறையாக விஜய் 66ல் இணைய வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு கொண்டிருக்கும் நிலையில் ரோஸ் பூக்கள் படர்ந்து இருக்கும் நுழைவாயிலின் கீழ் பூக்களின் கலரிலேயே ஸ்லீவ்லெஸ் சிங்கிள் பீஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் ஸ்டைலாக நின்று கொண்டிருக்க.. பூக்களோடு பூக்களாக மாறியுள்ளவரை மயக்காதே புள்ள என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.