Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'வேதனைகளைக் கொடுத்த அந்தப் படத்தால் தான் இதுவும் நடந்தது' - கீர்த்தி சுரேஷ்
Recommended Video
சென்னை : கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மகாநதி' தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நாயகி கீர்த்தி சுரேஷ் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
'தொடரி' படத்தைப் பார்த்து பலர் குறை சொன்னாலும், அந்தப் படத்தின் மூலம் தான் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனப் பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நடிகையர் திலகம்
கீர்த்தி சுரேஷ் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் 'விஜய் 62', விஷாலுடன் 'சண்டக்கோழி 2', விக்ரமுடன் 'சாமி 2' ஆகிய படங்களிலும் ரிலீஸ் ஆகவிருக்கும் 'நடிகையர் திலகம்' படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் 'நடிகையர் திலகம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் கீர்த்தி.
தொடரி
"தொடரி படத்தின் மூலம் எனக்கு ஏதாவது நல்லது நடக்கும் என எதிர்பார்த்தேன். அந்தப் படம் வெளியானபோது சிலர் பாராட்டினார்கள். பலர் குறை சொன்னார்கள். அந்தப் படம் மூலம் தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்ததுங்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
3 மணிநேரம் கதை
'நடிகையர் திலகம்' படத்துக்கு இயக்குநர் எனக்கு 3 மணிநேரம் கதை சொன்னார். இதுவரைக்கும் நான் நடித்த எந்தப் படத்திற்கும் இவ்வளவு நேரம் கதை கேட்டதில்லை. அவர் கதை சொல்வது அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா சூப்பராக இருந்தது.
நம்பிக்கை
கதை கேட்டவுடன் உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் நல்ல படங்களில் நடித்து வருகிறேன்.. நடிகையர் திலகத்தின் வாழ்க்கை பற்றிய இந்தப் படத்தில் நடிக்க முடியுமா என நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் உருவாகின. இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்." எனப் பேசினார் கீர்த்தி சுரேஷ்.