Just In
- 36 min ago
ஜல்லிக்கட்டு திரைப்படம் பின் வாங்கிய நிலையில் ஆஸ்கர் ரேஸில் முன்னேறியுள்ளது சூரரைப் போற்று!
- 1 hr ago
அன்பு ஒன்றுதான் அனாதை.. முகென் டயலாக்கை வாங்கியடித்த அனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
எப்போதுமே தல தான் காதல் மன்னன்.. மனைவி ஷாலினியுடன் எடுத்த ரொமான்டிக் செல்ஃபி.. செம வைரல்!
- 1 hr ago
சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்!
Don't Miss!
- News
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த தா பாண்டியன்.. என்ன செய்தார் தெரியுமா?
- Automobiles
தீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு!
- Sports
இதுதான் காரணம்.. புலம்பும் இங்கிலாந்து.. அணிக்குள்ளேயே ஏற்பட்ட குழப்பம்.. பின்னணியில் சிஎஸ்கே!
- Lifestyle
கண்ணாடி அணிபவா்களுக்கு கொரோனா தாக்கம் 3 மடங்கு குறைவாம் - ஆய்வில் தகவல்
- Finance
1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்?
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
சென்னை : மகாநடி என்ற ஒற்றை திரைப்படத்தின் மூலம் இந்தியாவையே தன்னுடைய நடிப்பால் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வர இதன் படப்பிடிப்பு கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சுதந்திர பறவை போல சுற்றித்திரியும் கீர்த்திசுரேஷ் சமீபத்தில் துபாய் சென்று வந்த அழகான புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

கனவு கன்னியாக
தமிழ் சினிமாவில் இளவரசன் என போற்றப்பட்டு வரும் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு என்றுமே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வரும் நிலையில் இவர்கள் முதல்முறையாக இணைந்து நடித்த ரஜினி முருகன் மாபெரும் வெற்றி பெற்று இரண்டாவது திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம்
மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்று பெருமை சேர்த்தார். இந்த திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

கொரானா தொற்று
பேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வர லாக்டவுனால் பல நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சமீபத்தில் ஐதராபாத்தில் நடிகர்கள் அனைவரும் தனித்தனி விமானத்தின் மூலம் வரவழைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அங்கு இருந்த நான்கு பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஸ்டைலா கெத்தா மாஸா
படப்பிடிப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு சுதந்திரப் பறவை போல சுற்றி திரிந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாய் சென்று அட்டகாசங்கள் செய்தவாறு ஏற்கனவே சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பயணிக்கும் போது கருப்பு கூலிங் கிளாஸ் உடன் செம ஸ்டைலிஷாக, ஸ்டைலா கெத்தா மாஸா பிளைட்டில் எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் எப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வருகிறார்.