நயன்தாரா 'நோ' சொன்ன ஹீரோவுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
ஹைதராபாத்: பவன் கல்யாணின் 25வது படத்தின் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார்.
இதையடுத்து பவன் நேசன் இயக்கத்தில் அஜீத்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

நயன்தாரா
வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கேட்டதற்கு நயன்தாரா மறுத்துவிட்டார். சீனியர் ஹீரோவான பவனுடன் நடித்தால் காதல் காட்சியோடு கட் பண்ணிவிடுவார்கள் என்று நடிக்க மறுத்துவிட்டாராம்.

ராகுல்ப்ரீத் சிங்
நயன்தாரா மறுப்பு சொன்ன பிறகு தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கீர்த்தி சுரேஷ்
வேதாளம் ரீமேக்கை அடுத்து பவன் த்ரிவிக்ரமின் இயக்கத்தில் நடிக்கிறார். இது பவனின் 25வது படம். இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

பவன் கல்யாண்
த்ரிவிக்ரம்-பவன் படத்தில் நடிக்க எத்தனையோ நடிகைகள் போட்டி போட்டபோதும் அந்த வாய்ப்பு கீர்த்திக்கு கிடைத்துள்ளது. த்ரிவிக்ரம்-பவன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான அத்தாரின்டிகி தாரேதி மற்றும் ஜல்சா ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











