Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்
Recommended Video
சென்னை: நடிகையர் திலகம் வெற்றி பெற்றுள்ளதால் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
நடிகையர் திலகம் படம் மூலம் தனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறியவர்களை அதிர வைத்தார் கீர்த்தி சுரேஷ். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகும் அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்கள் கொடுக்க இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
இந்நிலையில் கீர்த்திக்கு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர்.
ராஜமவுலி ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இதில் இரண்டில் ஒரு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர்.
கீர்த்தி
கீர்த்தி சுரேஷை நேரில் சந்தித்து படம் பற்றி கூறியுள்ளனர். ராஜமவுலி படத்தில் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கும்போது அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. படம் தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஹீரோயின்
ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை. படத்திற்கு தற்போது ஆர்ஆர்ஆர் என்று பெயர் வைத்துள்ளனர்.
படப்பிடிப்பு
பாகுபலி 2 படத்தை அடுத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்க உள்ளார் ராஜமவுலி. படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்குமாம். படம் 2020ம் ஆண்டு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.