படுக்கை அறை காட்சியில் பட்டையை கிளப்பிய கீர்த்தி சுரேஷ்..குஷியான ரசிகர்கள்
ஐதராபாத் : தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த படம் மகாநடி. இந்த படம் வெளிவந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

ஆனால் மகாநதி படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கீர்த்தி சுரேஷிற்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது தமிழில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
மகாநிதி படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த எந்த படமும் சரியாக ஒடவில்லை. இதனால் பட வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து, சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
கடைசியாக தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த ரங்குதே படம், ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. ரொமான்டிக் படமாக வெளிவந்த இந்த படத்தில் படுக்கை அறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ். இதை சிலர் விமர்சித்தாலும், கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவர் திடீரென கிளாமருக்கு மாறி விட்டதற்கு உற்சாக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
ரங்குதே படத்தில் நடிகர் நிதினுடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக நடித்த காட்சிகளின் ஃபோட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கி விட்டன. இதன் மூலம் கவர்ச்சி காட்டி நடிக்க தானும் ரெடி என கீர்த்தி சுரேஷ் மறைமுகமாக சொல்வதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சமீப காலமாக கீர்த்தி சுரேஷ், தான் கலந்து கொள்ளும் விழாக்கள், வெளியிடும் ஃபோட்டோக்களில் அரைகுறை ஆடையில் தோன்றி வருவது பலரையும், அட...கீர்த்தி சுரேசா இது என கேட்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











