விடாது கருப்பு..விபச்சார வழக்கில் கைதான பிரபல நடிகை..மீண்டும் காதலனுடன் கைது!
சென்னை : விபச்சார வழக்கில் சிக்கி கைதான பிரபல நடிகை ஜாமீனில் வெளிவந்த நிலையில் மீண்டும் காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள சீரியல் நடிகையான அஸ்வதி பாபு, மலையாளத்தில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தால், இளம்பெண்களை வைத்து விபசாரம் தொழில் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்து அவர்களை போதைக்கும் அடிமையாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது அடுத்து அவர் கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் கைது செய்யப்பட்டார்.

மலையாள நடிகை
இந்த வழக்கில் ஜாமின் பெற்று வெளியே உள்ள அஸ்வதி பாபுவை திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அஸ்வதி பாபு தனது காதலர் நௌஃபல் என்பவருடன் குடிபோதையில் ஹூண்டாய் க்ரெட்டா கார் அதிவேகமாக ஓட்டி சென்றதாக தெரிகிறது. வேகமாக சென்ற அந்த கார் தடுப்புச்சுவர் மற்றும் கார், பைக்குகள் மீது மோதி நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளனர்.

நடுரோட்டில் நின்ற கார்
இதையடுத்து,காரை சிலர் துரத்தின் சென்றனர் அப்போது காரின் டயர் வெடித்தால்,காரை நடுரோட்டில் நின்றது. பொதுமக்கள் துரத்திக்கொண்டு வந்ததை பார்த்தை பயந்து போன நடிகையும் அவரது காதலரும் காரிலிருந்து இறங்கி ஓடி, அருகிலிருந்த பள்ளியில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார்.

காதலருடன் கைது
இதையடுத்து,பள்ளியில் பதுக்கி இருந்த காதலர் நௌஃபாலை போலீசார் கைது செய்தனர். அப்போது நௌஃபாலுடன் ஒரு பெண்ணும் இருப்பதாக மக்கள் போலீசாரிடம் கூறியதை அடுத்து, போலீசார் மீண்டும் அந்த இடத்தை சோதனை செய்து அஸ்வதி பாபுவை கைது செய்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைப்பு
மருத்துவ பரிசோதைனையில் இவர்கள் என்ன போதை மருந்து பயன்படுத்தினார்கள் என்பது குறித்து தெளிவாக தெரிந்துவிடும் என்றும். ஏற்கனவே இவர் விபச்சார வழக்கு மற்றும் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டதால், மீண்டும் விற்பனை செய்கிறாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











