ரூ 10 லட்சம் கட்டுங்க... இல்லன்னா கமலின் 'பாபநாச'த்துக்கு தடைதான்! - கேரள நீதிமன்றம்

By Shankar

கொச்சி: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு முன் நீதிமன்றத்தில் ரூ 10 லட்சத்தைக் கட்டுமாறு இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு தடைகேட்டு எழுத்தாளர் சதீஷ் பால் என்பவர் கொச்சி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததையும், அந்த வழக்கில் இந்தப் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதையும் ஏற்கெனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்த சதீஷ் பால் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற நாவல்தான் த்ரிஷ்யம் படத்தின் ஒரிஜினல் கதை. நாவலைப் படித்தபிறகு, த்ரிஷ்யம் படத்தைப் போட்டுப் பார்த்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி விஎஸ் வாசன் குற்றச்சாட்டை உறுதி செய்தார்.

Kerala Court Halts 'Drishyam' Tamil Remake Starring Kamal Haasan over Copyright Issue

இந்த வழக்கில் அவர் அளித்துள்ள தீர்ப்பில், "ஒரு மழைக்காலத்து நாவலுக்கும் த்ரிஷ்யம் படத்துக்கும் மிகச் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. மற்றபடி அந்த நாவலைத் தழுத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை விதி மீறலாகும்.

த்ரிஷ்யம் படத்தை தமிழில் உருவாக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே ரூ 10 லட்சத்தை பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்," என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் படத்துக்கு தமிழில் பாபநாசம் என தலைப்பிடப்பட்டு, பூஜையும் போடப்பட்டுவிட்டது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல கமல் தயாராக இருந்த நிலையில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது.

அநேகமாக, நீதிமன்றம் சொன்ன தொகையைச் செலுத்தி, படப்பிடிப்புக்குச் செல்லவே கமல் விரும்புவார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X