twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்!

    By Shankar
    |

    Jayamala
    பத்தனம் திட்டா: சபரிமலையில் அய்யப்பன் சிலையைத் தொட்ட விவகாரத்தில் வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஆஜராகுமாறு நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சபரி மலை அய்யப்பன் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. 10 வயதுக்கு கீழான சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் செல்லலாம்.

    இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் இளம் வயதில் சென்று சாமி கும்பிட்டதாகவும், சாமி சிலையை தொட்டதாகவும் கன்னட நடிகை ஜெயமாலா முன்பு கூறி இருந்தார்.

    இது பெரிய பிரச்சினையாகி, இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், "ரன்னியில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி இருப்பதால், அந்த கோர்ட்டில்தான் விசாரணை நடைபெற வேண்டும்'' என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில் ரன்னி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ரமேஷ் குமார் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, "அக்டோபர் 18-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஜெயமாலா உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    English summary
    Kerala court ordered to send notice to actress Jayamala in the long pending Sabari Mala case filed against her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X