Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்!
சபரி மலை அய்யப்பன் கோயிலுக்குள் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. 10 வயதுக்கு கீழான சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் செல்லலாம்.
இந்த நிலையில் இந்த கோவிலுக்குள் இளம் வயதில் சென்று சாமி கும்பிட்டதாகவும், சாமி சிலையை தொட்டதாகவும் கன்னட நடிகை ஜெயமாலா முன்பு கூறி இருந்தார்.
இது பெரிய பிரச்சினையாகி, இது தொடர்பான வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி, நடிகை ஜெயமாலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், "ரன்னியில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி இருப்பதால், அந்த கோர்ட்டில்தான் விசாரணை நடைபெற வேண்டும்'' என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் ரன்னி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ரமேஷ் குமார் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, "அக்டோபர் 18-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஜெயமாலா உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.