Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கலாபவன் மணி மரணம்: விசாரிக்க மறுத்த சிபிஐ, அதிரடி 'ஆர்டர்' போட்ட ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின் நண்பர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
மது
கலாபவன் மணி அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவரின் மனைவியும், சகோதரரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சிபிஐ விசாரணை
கலாபவன் மணி இறந்து ஓராண்டுக்கு மேல் ஆன பிறகு அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோர்ட்
சிபிஐ ஒரு மாதத்திற்குள் கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரணையை துவங்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மணியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.
சிபிஐ
மணியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தில் தாங்கள் பல வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால் மணியின் வழக்கை ஏற்க முடியாது என்று முன்பு சிபிஐ தெரிவித்த நிலையில் கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.