Don't Miss!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நோட்டீஸ் கொடுக்காமல் சன்னி லியோனை கைது செய்யக் கூடாது.. கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவனந்தபுரம்: முறையான நோட்டீஸ் கொடுக்காமல் சன்னி லியோனை கைது செய்யக் கூடாது என கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்பத்துடன் கேரளா வந்துள்ள சன்னி லியோன் மீது தொடரப்பட்டுள்ள மோசடி புகார் மீது கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் டிவியில் விஜேவான பிக்பாஸ் பிரபலம்.. முதல் ஷோவே ஸ்பெஷல்.. அப்போவே அக்ரிமென்ட் போட்ருப்பாங்களோ!
மோசடி புகார் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று நடிகை சன்னி லியோன் முறையிட்டு இருந்தார்.
கேரளாவில் சன்னி லியோன்
கேரளாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை சன்னி லியோன். மேலும் எம்டிவியின் ஸ்போர்ட்ஸ் வில்லாவுக்கான ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார் நடிகை சன்னி லியோன். சுற்றுலா வந்த இடத்தில் சன்னி லியோனுக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
ஏமாற்றினாரா சன்னி
கேரளாவில் கடந்த 2019ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோனுக்கு சுமார் 29 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், அவர் கலந்து கொள்ளாமல் ஏமாற்றினார் என பெரும்பாவூரைச் சேர்ந்த ஆர். ஷியாஸ் என்பவர் கேரள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதிரடி கைது
இந்த மோசடி வழக்கு தொடர்பாக கேரளாவில் சுற்றுலா செய்து வரும் நடிகை சன்னி லியோனிடம் கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நடிகை சன்னி லியோனை அதிரடியாக கைது செய்யவும் ஏற்பாடுகள் தீவிரம் காட்டப்படுவதாக தகவல்கள் பரவியது பரபரப்பை கிளப்பியது.
முன் ஜாமீன் கோரி
சூழ்நிலையை புரிந்து கொண்ட நடிகை சன்னி லியோன், முன் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு அளித்தார். தன்னையும் தனது கணவர் டேனியல் வெப்பரையும் இது தொடர்பாக கைது செய்யக் கூடாது என்றும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியுள்ளார்.
கைது பண்ணக் கூடாது
நடிகை சன்னி லியோனின் மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நடிகை சன்னி லியோனை முன் அறிவிப்பு ஏதுமின்றி கைது செய்யக் கூடாது என கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிரடி தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
எதையும் நம்பாதீங்க
இந்நிலையில், தற்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்க படிக்கிற எதையுமே நம்பாதீங்க, ஆனால், உங்கள் முன்னால் எது இருக்கிறதோ அதை மட்டுமே நம்புங்க என தனது சில கவர்ச்சிகரமான போட்டோக்களையும் பதிவிட்டு மறைமுகமாக இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் போட்டுள்ளார்.