Don't Miss!
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சினிமாவுக்கான கட்டுப்பாடு தளர்வு.. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்க அனுமதி.. ஆனா, 5 பேர்தான்!
திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சினிமாதுறையின், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உட்பட பெரும்பாலான நாடுகளில் இதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கிறது.
இந்த உயிர்கொள்ளி வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் இருக்கின்றன.
ஏன் என்னாச்சு? பிரபல சின்னத்திரை நடிகை விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
அதிகரித்து வருகிறது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, லாக்டவுன் பிறபிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
லாக்டவுன்
இருந்தும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களினின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மே 3 ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனை மத்திய அரசு 17 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால், லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சினிமா படப்பிடிப்பு
இந்த லாக்டவுன் காரணமாக, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் சிக்கலாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் வீடுகளில் சும்மா இருக்கின்றனர். படங்களின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் நிறுத்தப்பட்டன.
போஸ்ட் புரொடக்ஷன்
இந்நிலையில் கேரளாவில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தி உள்ளது. சினிமாவுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.
பின்னணி இசை
அதிகப்பட்சமாக 5 பேர் மட்டுமே சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டப்பிங், பின்னணி இசை அமைப்பு, சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட பணிகளை சில மலையாள சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் திங்கட்கிழமை தொடங்க உள்ளன. மோகன்லால், மம்மூட்டி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
விஜய் ஒரு அமைதிப்புயல்.. பகவதி படத்துல இருந்தே.. ’கில்லி அப்பா’ ஆஷிஷ் வித்யார்த்தி பேட்டி!
-
Aavesham movie: 5 நாட்களில் அரைசதம்.. 50 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் ஃபகத் பாசிலின் ஆவேஷம்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்