Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சினிமாவுக்கான கட்டுப்பாடு தளர்வு.. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்க அனுமதி.. ஆனா, 5 பேர்தான்!
திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சினிமாதுறையின், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உட்பட பெரும்பாலான நாடுகளில் இதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கிறது.
இந்த உயிர்கொள்ளி வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் இருக்கின்றன.
ஏன் என்னாச்சு? பிரபல சின்னத்திரை நடிகை விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
அதிகரித்து வருகிறது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 1,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, லாக்டவுன் பிறபிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
லாக்டவுன்
இருந்தும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களினின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மே 3 ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனை மத்திய அரசு 17 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால், லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சினிமா படப்பிடிப்பு
இந்த லாக்டவுன் காரணமாக, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் சிக்கலாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் வீடுகளில் சும்மா இருக்கின்றனர். படங்களின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் நிறுத்தப்பட்டன.
போஸ்ட் புரொடக்ஷன்
இந்நிலையில் கேரளாவில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தி உள்ளது. சினிமாவுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.
பின்னணி இசை
அதிகப்பட்சமாக 5 பேர் மட்டுமே சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டப்பிங், பின்னணி இசை அமைப்பு, சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட பணிகளை சில மலையாள சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் திங்கட்கிழமை தொடங்க உள்ளன. மோகன்லால், மம்மூட்டி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!