Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனனிடம் போலீஸ் விசாரணை!
கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் பிஜூ ராதாகிருஷ்ணன் மீது அவரது முதல் மனைவியை கொலை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் பாதுகாவலர் உள்பட 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் நடிகை ஷாலு மேனனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. அதனை ஆரம்பத்தில் ஷாலு மேனன் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஷாலுமேனனை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணிக்கு திருவல்லா டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தனது தாயார் கலா தேவியுடன் சென்று ஷாலு மேனன் ஆஜரானார்.
அவரிடம் கூடுதல் டி.ஜ.பி. ஹேமச்சந்திரன், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பிரஜி ஜேக்கப், கோட்டயம் டி.எஸ்.பி. அஜித் ஆகியோர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது தாயார் கலா தேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின் வெளியில் வந்த ஷாலு மேனன் பத்திரிகையாளர்களின் கேள்விகளைக் கண்டு கொள்ளாமல் காரில் ஏறிச் சென்றார்.