Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவில் நடிக்கக் கிளம்புகிறார்கள் திருவனந்தபுரம் சிறைக் கைதிகள்!
கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள புஜாபுராவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியின் விற்பனை கடந்தாணடு தொடங்கியது. இதை தொடர்ந்து சிக்கன் குழம்பு, சில்லி சிக்கன் விற்பனையும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஒரு சப்பாத்தி ரூ.2க்கும், சிக்கன் குழம்பு ரூ.25க்கும், சில்லி சிக்கன் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு தரமான உணவு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சமையலுக்கு அடுத்தபடியாக இங்குள்ள கைதிகள் சினிமாவிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து கேரள சிறைத்துறை இயக்குனர் அலெக்சாண்டர் ஜேக்கப் கூறுகையில், திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, சிக்கனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் சப்பாத்தி, சிக்கன் விற்பனையாகி வருகிறது.இது தவிர பல கைதிகளுக்கு இலக்கிய ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதை ஊக்குவிக்க சிறை துறை தீர்மானித்துள்ளது.
சில கைதிகள் சினிமாவுக்கு கதை எழுதி வருகின்றனர். இந்த கதையில் அவர்களே நடிக்கவும் தீர்மானித்துள்ளனர். நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் கைதிகளின் நடிப்பில் விரைவில் ஒரு மலையாள சினிமா தயாராகும் என்றார் அவர்.