Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி!
கேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
சென்னை: வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எட்டு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் சுமார் 8 அடி உயரத்துக்கு வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்துக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையும், துணை ராணுவமும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையறிந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். கேரளாவின் நிலையை கண்டு மனம் வருந்துவதாகவும், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.