Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி!
கேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
சென்னை: வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எட்டு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் சுமார் 8 அடி உயரத்துக்கு வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்துக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையும், துணை ராணுவமும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையறிந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். கேரளாவின் நிலையை கண்டு மனம் வருந்துவதாகவும், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.