Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஹீரோவைத் திருப்திப்படுத்த ஓடாத படத்துக்கு தியேட்டரை ப்ளாக் பண்ணுவதா?' - கேயார் கண்டனம்
இன்று காலை நடந்த காதல் சொல்ல ஆசை படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியீட்டு விழாவில் பேசிய கேயார், "முன்பெல்லாம் தீபாவளிக்கு 14 படங்கள் வரை வெளியாகின.
இப்போது அந்த நிலை மாறி, மூன்று படங்கள் வெளியாவதே கஷ்டம் என்றாகிவிட்டது. இந்தப் படங்களுக்கே போதிய தியேட்டர் கிடைக்காத நிலை. அதே நேரம் ஒரே படத்துக்கு அதிக அரங்குகள் ஒதுக்கப்படுவதும் நல்லதுதான். வேறு வழியில்லை... பைரசியை ஒழிக்க இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆனால் ஓடாத படத்தை ஓட்ட வைக்க வேண்டும் என்பதற்காக தியேட்டர்களை ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் பல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை. அஞ்சு பேர், பத்து பேரை வைத்துக் கொண்டு படத்தை ஓட்டுகிரார்கள். நடிகரைத் திருப்திப்படுத்த செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர்கள் இதை வெளிப்படுத்த வேண்டும்," என்றார்.
முன்பெல்லாம் ஜேகே ரித்தீஷ், பவர் ஸ்டார் போன்றவர்கள் செய்த இந்த வேலையை இப்போது முன்னணி நடிகர்களே செய்கிறார்கள். இதைத்தான் கேயார் இப்படி குத்திக் காட்டியுள்ளார்.