Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 'நலன் காக்கும் அணி' சார்பில் கேயார் போட்டி!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 824 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் கேயார் தலைவராகப் போட்டியிடுகிறார். இந்த அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
நடிகர் சரத்குமார், மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தனர்.
துணைத் தலைவர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் (லிங்குசாமி சகோதரர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் கௌரவச் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, செயற்குழுவுக்கு ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோரின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெறுகிறது.