twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி ஹீரோயின்களுக்கு சம்பளம் பாக்கி வையுங்கள்!- கேயார் போட்ட குண்டு

    By Shankar
    |

    Keyar's comment irks actresses
    சென்னை: இனி ஹீரோயின்களுக்கு கொஞ்சம் சம்பள பாக்கி வையுங்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார்.

    பட்டத்து யானை பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "இப்போதெல்லாம் ஹீரோயின்கள் பெரும்பாலும் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால் பாலிவுட்டில் அப்படியில்லை. அங்கே விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் ஹீரோயின்கள் வந்தே தீர வேண்டும்.

    இந்தப் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜுன் பரவாயில்லை... புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன்.

    ஒரு படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அந்தப் படம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். ஆகையால் படம் முடிந்தவுடன் சம்பளம் முழுவதையும் கொடுக்காமல், சிறிதளவு சம்பளத்தை பாக்கி வைத்து, படம் விளம்பரப்படுத்துதல் வேலை முடிந்ததும் அந்த சம்பளத்தை கொடுக்கலாம்,'' என்றார்.

    கேயாரின் பேச்சு நடிகர் நடிகையர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில் நடிகர் சங்கம் தலையிட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

    English summary
    Director Keyar says that the producers should keep a percentage of salary of the actresses till the completion of a movie's promotional campaign.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X