Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் நூறு நாள் ஷூட்டிங் முடிந்தது... ரிலீஸ் அந்த மாதத்தில் இல்லையாமே?
சென்னை: 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன.
Recommended Video
கன்னட ஹீரோ யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.
அதிக பட்ஜெட்
இந்தப் படத்தை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சஞ்சய் தத்
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இரண்டாம் லுக் போஸ்டரும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரவீணா டாண்டன்
இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ரவீணா டாண்டன் சமீபத்தில் இணைந்தார். அவர், பிரதமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் நடிக்கும் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம்தான் கேட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதால் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
போஸ்ட் புரொடக்ஷன்
கடைசிக்கட்டப் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்துள்ளது. சுமார் 100 நாட்கள் நடந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. படம் ஜூலை மாதம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!