Just In
- 8 min ago
எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
- 15 min ago
தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!
- 39 min ago
இவ்ளோ கி.மீ. ரோட் டிரிப்? நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்!
- 48 min ago
இதுக்காகதான் அவர வெளியே அனுப்ப சொன்னோம்.. பாலாஜியின் ஃபினாலே பேச்சால் கடுப்பான பிரபலம்!
Don't Miss!
- News
அயோத்தி அருகே.. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது மசூதி.. மரம் நடுதலுடன் ஜன.26ல் துவக்க விழா!
- Sports
2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்!?
- Lifestyle
பெண்களே! இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..!
- Finance
15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..!
- Automobiles
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் டீசர் எப்போது? தயாரிப்பாளர் சர்பிரைஸ் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், உருவாகி வருகிறது.
சினிமாவில் அரசியல் பேசிய ரஜினி.. நிஜத்திலும் ’தர்பார்’ அமைப்பாரா அண்ணாத்த? ஒரு சின்ன ரவுண்டப்!

நடிகர் சஞ்சய் தத்
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதில் இருந்து முழுவதும் குணமடைந்துவிட்டார். இதன் ஷூட்டிங்கில் இந்த மாதம் கலந்துகொள்கிறார்.

சில காட்சிகள்
கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. 'பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதில் முக்கியமானது சண்டைக் காட்சி. அனுமதி கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கும் என்று படக்குழு சார்பில் ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது.

மீண்டும் ஷூட்டிங்
அதன்படி கடந்த மாதம் மங்களூரில் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. 8 மாதத்துக்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் படத்தின் ஹீரோயின் ஶ்ரீனிதி ஷெட்டி. இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப் படத்தையும் அவர் வெளியிட்டார்.

கார்த்திக் கவுடா
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்கிடையே, இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கூறியுள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் கவுடா, இதை தெரிவித்துள்ளார். அந்த டீசர் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.