Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் தேவை… கே.ஜி.எஃப் யாஷ்
சென்னை: கே.ஜி எஃப் படத்தின் நடிகர் யாஷ் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். தமிழக மக்களின் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும் என்று கூறினார். அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது ஜூன் அல்லது ஜூலையில் திரைக்கு வரும் என்று கூறினார்.
கே.ஜி எஃப் படத்தின் மூலம் உச்சத்தை தொட்டவர் யாஷ் இன்று வெற்றி நாயகனாக வளர்ந்து நிற்கிறார். தமிழ் சினிமாவில் கூட ஓரு ஹீரோவுக்கு இப்படி ஒரு ஆக்சன் காட்சி இருக்குமா என்றால் சந்தேகம் தான். அந்த அளவிற்கு கே.ஜி.எஃப்பில் ஒவ்வொரு ஆக்சன் காட்சியும் சும்மா இடியாய் அமைந்து இருக்கும். இந்த ஒரு படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார் யாஷ்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது ஜூன் அல்லது ஜூலையில் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
சென்னையில் உள்ள ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களின் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும் என்று கூறினார். நான் நம்புவது ஒன்றே ஒன்றுதான் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எப்படி வாழ்கிறோம் அதுதான் முக்கியம் நான் செய்கின்ற வேலை மக்களுக்கு பிடித்ததால்தான் கே ஜி எஃப் வெற்றி அடைந்தது என்றார்.
வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வருக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்
அன்பு தான் முக்கியம் மக்களுக்கு என்னை பிடித்ததால்தான் ஏற்றுக்கொண்டார்கள் இந்த படம் இவ்வளவு வசூல் செய்திருக்கிறது. எப்பொழுதும் அவர்களின் அன்பு எனக்கு வேண்டும் என்றார்.
தெலுங்கானா என்கவுண்டர் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே பயம் இருக்கும் ஆனால் சட்டத்தை மதித்து வாழும் நாட்டில் உள்ளோம் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் என்று பதில் அளித்தார்.