வெற்றிக்கு பரிசாக கணவருக்கு ஆடி கார் பரிசளித்த குஷ்பு
சமீபத்தில் வெளியான கலகலப்பு படத்தின் வெற்றிக்கு பரிசாக விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை தனது கணவரும் இயக்குநருமான சுந்தர். சி க்கு பரிசாக அளித்துள்ளார் குஷ்பு.
கார் பரிசளித்தது குறித்து கூறியுள்ள குஷ்பு என் காதலின் வெளிப்பாடாகவே ஆடி காரை பரிசளித்தேன் என்று கூறியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கிய 'கலகலப்பு' படம் இந்த வருடத்தின் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. நான் இப்படத்தின் தயாரிப்பாளர் இதில் பணியாற்றியதற்காக சுந்தர் சிக்கு ஊதியம் அளிக்கவில்லை. அதற்கு பதில் ஆடி கார் அளித்துள்ளேன்.
சுந்தர்.சிக்கு கார்கள் மீது அதிக பிரியம். அவருக்கு ஏதாவது பரிசு பொருளை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது எனவேதான் கார் பரிசளித்தேன் என்று குஷ்பு மேலும் கூறியுள்ளார். வெற்றிகரமான படங்களை இயக்குவதற்கு என் கணவரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பரிசு அமையும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications
