கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சுந்தர் சி.. குஷ்பு ட்விட் !
சென்னை : இயக்குனர் சுந்தர் சி கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமெடுத்து அதிதீவிரமாகபரவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிவேகமாக பரவுகிறது
தமிழகத்தில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 2,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் செந்தில்
திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் .நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பாலிவுட் பிரபலங்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் மருத்துவமனையில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் , இன்று குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சுந்தர் சிகொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
நண்பர்களே உங்கள் பிராத்தனைகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது. என் கணவர் சுந்தர் சி தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார் அவர் எங்களது ஹவுஸில் தங்க உள்ளார். எனவே அவரை நான் 7 நாட்களுக்குப் பிறகே சந்திக்க இயலும் . உங்கள் ஆதரவுக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications