Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அவரும் நானும்...அவரில்லாமல் நானில்லை...திருமண நாளுக்கு குஷ்புவின் ரொமான்டிக் பதிவு
சென்னை : மும்பையை சேர்ந்தவரான குஷ்பு, டைரக்டர் சுந்தர்.சியை 2000 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளன.
ஆள விடுங்கடா சாமி.. யாரிடமும் திரிஷ்யம் 3 கதையை கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. ஜீத்து டென்ஷன்!
திருமணம் நடந்தது முதல் தனது கணவரின் பிறந்தநாள், சுந்தர்.சி தன்னிடம் காதலை சொன்ன தினம் என ஒவ்வொன்றிற்கும் சுந்தர்.சி மீது தனக்கு இருக்கும் காதலை வெளிப்படும் விதமாக குஷ்பு ஏதாவது ஒன்றை செய்து வருகிறார்.
21 வது திருமண நாள்
தற்போது அரசியலில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார் குஷ்பு. இந்நிலையில் இவர்கள் தங்களின் 21 வது திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.
குஷ்புவின் ரொமான்டிக் பதிவு
இதனை கொண்டாடும் விதமாக குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்டிக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சுந்தர்.சியுடன் இருக்கும் போட்டோக்கள் சிலவற்றை பதிவிட்டு அத்துடன், அப்போது முதல் இப்போது வரை என் வாழ்க்கை பயணம் சந்தோஷமாக உள்ளது. நீங்கள் என்னுடன் இருப்பதால். நான் நம்பிக்கையுடன் நடக்கிறேன், நீங்கள் என் கை பிடித்து நடப்பதால்.
உன்னால் நான்
நான் சுதந்திரமாக பேசுகிறேன், நீங்கள் உங்கள் எண்ணங்களை என் மீது திணிக்காததால். இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் என் வாழ்க்கையில் வந்து, வாழ்க்கையை மிக அழகான சொர்க்கமாக்கியதற்காக நன்றி சொல்ல நினைக்கிறேன்.
நாணத்தை உணர்கிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உயிரே. நீங்களும் நானும் வாழ்க்கையில் அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இணைந்து 21 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இப்போதும் நீங்கள் ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் நானத்தை உணர்கிறேன். இவ்வாறு குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.