Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக ஓகே சொல்லிட்டாராமே சுதீப்...
சென்னை: சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப் ஓ.கே.சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர்.
அடுத்த மாதம்
இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க முன் வந்தார் சுரேஷ் காமாட்சி. அடுத்த மாதத்தில் இருந்து மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக, தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
கன்னட ஹீரோ சுதீப்
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லன் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருப்பதால் பவர்புல் வில்லனை தேடி வந்தனர்.
இந்நிலையில், சல்மான் கானின், தபாங் 3 படத்தில் சுதீப்பின் வில்லன் கேரக்டர் பேசப்பட்டதால் அவரை வில்லனாக்க முடிவு செய்தனர். கன்னட ஹீரோ சுதீப், தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.
கதை கேட்டார்
இந்நிலையில், முதலில் கதை சொல்லுங்கள், பிடித்திருந்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்தார் சுதீப். இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, சுதீப்பை சந்தித்து கதை சொன்னார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
கதையை கேட்ட சுதீப், அவரது கேரக்டர் பிடித்திருந்தாதால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிகிறது. படத்துக்கு, மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகிறது.