Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக ஓகே சொல்லிட்டாராமே சுதீப்...
சென்னை: சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, கன்னட ஹீரோ சுதீப் ஓ.கே.சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர்.
அடுத்த மாதம்
இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க முன் வந்தார் சுரேஷ் காமாட்சி. அடுத்த மாதத்தில் இருந்து மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக, தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
கன்னட ஹீரோ சுதீப்
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லன் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருப்பதால் பவர்புல் வில்லனை தேடி வந்தனர்.
இந்நிலையில், சல்மான் கானின், தபாங் 3 படத்தில் சுதீப்பின் வில்லன் கேரக்டர் பேசப்பட்டதால் அவரை வில்லனாக்க முடிவு செய்தனர். கன்னட ஹீரோ சுதீப், தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.
கதை கேட்டார்
இந்நிலையில், முதலில் கதை சொல்லுங்கள், பிடித்திருந்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்தார் சுதீப். இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, சுதீப்பை சந்தித்து கதை சொன்னார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
கதையை கேட்ட சுதீப், அவரது கேரக்டர் பிடித்திருந்தாதால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிகிறது. படத்துக்கு, மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகிறது.