நோ மீன்ஸ் நோ... மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கிச்சா சுதீப் மறுப்பு...
சென்னை: சிம்புவுக்கு வில்லனாக நடிக்க, ஒப்புக்கொண்டதாக வந்த தகவல் தவறானது என தெரிவித்துள்ளார் கன்னட ஹீரோ சுதீப்.
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தொடங்க இருப்பதாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார், சுரேஷ் கமாட்சி. இந்நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையிலான பிரச்னையை தயாரிப்பாளர்கள் சிலர் பேசி தீர்த்தனர்.

ஜனவரியில் ஷூட்டிங்
இதையடுத்து, படத்தை மீண்டும் தயாரிக்க முன் வந்தார் சுரேஷ் காமாட்சி. அடுத்த மாதத்தில் இருந்து மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக, தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிம்பு.

கன்னட ஹீரோ சுதீப்
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லன் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருப்பதால் பவர்புல் வில்லனை தேடி வந்தனர். இந்நிலையில், சல்மான் கானின், தபாங் 3 படத்தில் சுதீப்பின் வில்லன் கேரக்டர்
பேசப்பட்டதால் அவரை வில்லனாக்க முடிவு செய்தனர். கன்னட ஹீரோ சுதீப், தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.

வெங்கட்பிரபு
இந்நிலையில், முதலில் கதை சொல்லுங்கள், பிடித்திருந்தால் நடிக்கிறேன் என்று தெரிவித்தார் சுதீப். இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, சுதீப்பை சந்தித்து கதை
ஒப்புக்கொண்டதாக...
கதையை கேட்ட சுதீப், அவரது கேரக்டர் பிடித்திருந்தாதால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும், படத்துக்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

மறுப்பு
இந்நிலையில் நடிகர் சுதீப் மறுத்துள்ளார். இது தவறான தகவல் என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக வேறு வில்லனைப் படக்குழு தேடி வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications