Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கிடாரி... சசிகுமாருக்கு ஏன் இந்த கொலவெறி? #Kidaari
'அடுத்த நிமிடம் எங்கே நம் கழுத்து அறுபட்டு விடுமோ என்ற அச்சத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது... படம் முடிந்து வெளியில் வரும்போதும் மூக்கிலிருந்து ரத்த வாடை அகலாத மாதிரியே இருக்கு...'
- சசிகுமாரின் கிடாரி பார்த்துவிட்டு ரசிகர்கள் சொன்ன கமெண்ட் இது.
'படத்தின் ஆரம்பம் தொடங்கி, இறுதி வரை பத்து நிமிடத்துக்கு ஒரு கொலையும் ரத்தச் சகதியுமாகச் செல்கிறது படம். கொடூரம், வன்முறை, அதனூடே சில சென்டிமென்ட் மற்றும் காதல் காட்சிகள்.... இதையே தனது பார்முலாவாக வைத்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார். இந்தப் படத்தோடு இந்தப் பார்முலாவுக்கு குட்பை சொல்லாவிட்டால், சசிகுமார் நிலை ரொம்ப கஷ்டம்தான்...'
- இதுவும் படம் பார்த்த ஒரு ரசிகனின் கருத்துதான்.
சுப்பிரமணியபுரம், போராளி, குட்டிப் புலி, சுந்தரபாண்டியன் என சசிகுமார் முன்பு நடிக்க எல்லாப் படங்களின் காட்சிகளும் இந்தப் படத்தில் ஏதோ ஒரு இடத்தில் எட்டிப் பார்ப்பது மகா அலுப்பாக உள்ளது.
கிராமங்களில் எத்தனை எளிய வாழ்க்கை இருக்கிறது.. அழகான காதல்... அருமையான நகைச்சுவைகள் கிடக்கின்றன. ஆனால் கிராமத்து மனிதர்கள் சதா ரத்தச் சேற்றில் உழன்று கொண்டிருப்பதாகத்தான் இந்த கிடாரி சித்தரிக்கிறது.
கிட்டத்தட்ட 250 அரங்குகளில் வெளியான கிடாரி மீது ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் முதல் காட்சி முடிந்ததுமே 'அந்த ஆபத்தான மிருகம் இதுதான்.. ஓடிடுங்க' எனும் ரீதியில் சமூக வலைத் தளங்களில் கமெண்டுகள் குவிய, இன்று சனிக்கிழமை கூட எளிதாக டிக்கெட் கிடைக்கும் நிலைதான் இந்தப் படத்துக்கு உள்ளது என்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!