டெங்குவுக்கு குழந்தைகள் பலியாகும்போது மெர்சல் தயாரிப்பாளர் கிறிஸ்தவரான்னு கேட்கும் தலைவர்: டிடி
சென்னை: தமிழகத்தில் பல குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும்போது ஹேமா ருக்மணி கிறிஸ்தவரா என்பதை தெரிந்து கொள்ள ஒரு தலைவர் முயற்சி செய்கிறார் என்று டிடி தெரிவித்துள்ளார்.
மெர்சல் விவகாரம் பெரிதாகிவிட்டது. பாஜக கெடு விதித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்குவதாக தெரிவித்த தயாரிப்பாளர் பின்னர் மறுத்துவிட்டார்.
எந்த வசனத்தையும் நீக்க முடியாது என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் தெரிவித்தார்.
தலைவர்
தமிழகத்தில் பல குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும்போது ஹேமா ருக்மணி கிறிஸ்தவரா என்பதை தெரிந்து கொள்ள ஒரு தலைவர் முயற்சி செய்கிறார். எனக்கு ஒன்னுமே புரியல என்று டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ட்வீட்டியுள்ளார்.
ஆன்ட்டி இந்தியன்
மேடம் எதிர்த்து பேசாதீங்க அப்றோம் உங்களையும் ஆன்ட்டி இந்தியன்னு சொல்லிருவாங்க
ப்ளீஸ்
பயப்படாம பேசுமா நாங்க இருக்கோம். ஒன்னும் பாதியுமா டிவிட் பன்னாத. பிலிஸ் 🙏
பேசக் கூடாது
டிடி நீங்க வேற. நீங்க இப்படி ட்வீட் போட்டதுக்கு உங்களை மலையாளி ஆக்கி இத பத்திலாம் பேசக் கூடாதுன்னு சொன்னாலும் சொல்வாங்க. பேட் பாய்ஸ்.


Click it and Unblock the Notifications











